திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் – நூல் அறிமுகம்

திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்

திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சித்த மருத்துவத் தொகைப் பெயர்களாக வழங்கப்படும்.

காயம் இரண்டு

வெங்காயம் (உள்ளி), பெருங்காயம், இரண்டையும் காயம் இரண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பஞ்சகாயம்

உள்ளி, சுக்கு, திப்பிலி, பெருங்காயம், மிளகு இவற்றைப் பஞ்சகாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐங்காயம்

சுக்கு, மிளகு, திப்பிலி, உள்ளி, காயம் ஆகிய இவைகளை ஐங்காயம் என்று அந்தந்த தொகைப் பெயர்களிளேயே குறிப்பிடுகின்றார்.

மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு இவற்றின் மருத்துவப் பயன்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

மேலும், பூசைக்குரிய மலராக தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர், அழகிய கருநெய்தல், மணம் விரியும் பூகமும், பூ மாதவி, மந்தாரம், தும்பை, மகிழம்பூ, சுரபுன்னை, மல்லிகை, சண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய பதினான்கு வகையான நறுமணமிக்கப் பூக்களை வழிப்பாட்டிற்குரியத் தாவரங்களாகப் பட்டியலிட்டிருக்கின்றார். மேலும் நந்தி வழிபாட்டிற்கு நறவ மலரை குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மிகப் பயன்பாட்டில் ஆலம், கொன்றை, பலாசு, வெண் நாவல், வில்வம் ஆகிய தாவரங்களும் மந்திரங்கள் எழுதும் பலகையாகவும், ஓலையை வைத்து எழுதும் பலகையாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பே இல்லாமல் ஞானத்திற்குக் கத்தரியையும், உறுதிப்பாட்டிற்குப் பாகற் காயையும், தத்துவ ஆராய்ச்சிக்குப் பூசணியையும், பிறவிப்பயனுக்கு வாழையையும், சமாதிநிலை இன்பத்திற்கு மாம்பழத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாட்டிற்குத் திப்பிலியையும், மாம்பழத்தை சுகத்துக்கங்களுக்கும், தன் மனைவிக்கு வீட்டில் விளையும் மாம்பழத்தையும், பலாப்பழத்தையும்; மாற்றான் மனைவிக்குப் புளியம் பழத்தையும், ஈச்சம் பழத்தையும் ஒப்பிட்டு மறைபொருளாகக் கூறியுள்ளார்.

வேள்வி வளர்க்கும் குச்சியாகவும் (சமித்து), நியதி உடையவர்களுக்கு ஒப்பாகவும் – ஆல், அரசு, அத்தி தாவரங்களையும்

பூசைக்குரிய புனித பொருளாக – மஞ்சள், தர்ப்பை

வழிபாட்டு தாவரமாக – நெல், அருகம் புல்

தூப வழிபாட்டு பொருட்கள் – சந்தனம், அகில், குங்குமம், கற்பூரம்

வழிபாட்டு சாந்து – சந்தனம், கற்பூரம், குங்குமம்

தாவரத்தால் பெயர் பெற்ற ஊர்கள் – ஆலம், தில்லை, தேவதாரு

இறைவனின் முகத்தோற்றும் – குங்கும், செவ்வரத்தை, தாமரை தாவரங்களை கூறுவதுடன்

சிவலிங்கம்   – அரசமரம், வில்வ மரம், அரிசி, அரிசி அன்னம்

அத்தி        – மரம்-ஆதார எலும்பிற்கும், பக்குவப்பட்ட நிலைக்கும்; அத்திப் பழத்தை

– வினைபயன்;  அத்தி விதை – கருமுட்டை

அரசமரம்    – சிவலிங்கம்

ஆம்பல்      – அறியாமை

ஆலம்       – விதை – உயிர் அணு, நிற்குண பிரம்மம், காய் – குண்டாலம்

எட்டி        – முதுமை, பொதுமகளிர், சமாதி நிலை, அறம் செய்யாதவர்கள் போல்                  தோற்றம், உலக இன்பத்தால் ஏற்படும் துன்பம்

எள்          – அளவையும், கால அளவை குறிக்க

ஏலம்        – ஏழு ஆதாரங்கள்

கரும்பு       – இளமை, சாறு – உருவத்தோற்றம்

கமுகு       – அமுது

கல்ஆல்      – உபதேசத்திற்கு ஏற்ற இடம்

களா         – பெண்களின் சாந்து பொட்டு

கற்பூரம்      – தோன்றி மறையும் மனித வாழ்வு

கிஞ்சுகம்     – வாயிதழ்

குமட்டி பழம் – ஆனந்தம்

குவளை     – கண்கள்

கொட்டி      – அறிவு

சூரை        – துன்பம்

தண்டலை    – இறைவியின் தோற்றப் பொலிவுக்கு

தாமரை      – இறைவனின் முகம், கால், கண், கை, நிறம், பிராணவாயு தலையில்

நிறுத்துமிடத்தைக் குறிக்கவும், உறைவிடம், உலக இயக்கம், உயிர்மூச்சு, மூலாதாரம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சு, தொண்டைக்குழி, புருவநடு, நாதவிந்து, உணர்வுகள், அண்ட வெளி பொருட்கள், வண்ணத்திற்கும், கருவிலிருந்து வெளிவரும் பாதம்.

தில்லை                     –     கூத்து, வனம் – வாழ்விடம்

தென்னை                 –     குரும்பை – இறைவியின் கொங்கைக்கு,  இளநீர் – படையற் பொருள்,

நாவல்                        –     அபானனும் பிராணனும், கூடுகின்ற நிலை

நெய்தல்                    –     சிவபெருமானின் ஐந்துவித ஆற்றலுக்கு ஒப்பிட்டுள்ளார்.

நெருஞ்சில்              –     நெறி தவறிய வாழ்க்கை

நெல்                            –     வளர்ச்சி – காய சத்தி அடையும் வழி, வழிபாடு, அரிசியும், அரிசி

சோறும் வழிபாடும் சிவலிங்கம்.

நெல்லி         – தவநெறி வெளிப்பாடு,

பஞ்சு          – இறைவனின் ஒளி,

பருத்தி         – பரஞ்சோதி சுடர், வழிபாட்டின் உச்ச நிலை

பனை          – வைராக்கியத்திற்கான முதுகு தண்டு, வீடுபேற்று, பனை ஓலையை

மந்திர ஒலையாக குறிப்பிடுகின்றார்.

பாங்கர்         – சிரசில் ஏற்படும் ஒளியை பாங்கர் மலருக்கு ஒப்பிட்டுள்ளார்.

பாசி           – தெளிவற்ற மனநிலை, மயக்க உறவுகள்

பிரம்பு          – யோகிக்கு அடையாளம் (யோக தண்டம்)

புளி            – புளியம் பழம் ஓடு-பற்றற்ற நிலைக்கு, பார்த்ததும் எச்சில் ஊறுவது

புன்னை        – சிவகதி

பொற்பூவை            – இறைவியின் தோற்றம்

மஞ்சள்        – சமாதி அமைக்க

மா            – தளிர் – சிவ ஒளி; மாம்பழம் – தவத்தின் வெற்றி,

மிளகு          – அனைத்து வியாதிகளுக்கும் ஒரே தாவரமாக மிளகை குறிப்பிட்டுள்ளார்

முஞ்சில்       – சமாதிக்காக அமைக்கப்படும் நில அறை, நாணலின் அழிவற்ற தன்மையைப் பிரணவமந்திரத்தால் உடல் அழியாத தன்மையை                         ஒப்பிடுகின்றார்.

மூங்கிலை      – மூங்கிலின் முளைக்குருத்து – மணதிற்கும், முக்கலைகளுக்கும்

வஞ்சி          – இறைவியின் மென்மையான உடல்

வன்னி         – சுடர், அக்னிதேவன், நெருப்பு, வேள்வித்தீ, மந்திர எழுத்து

வாழை         – இன்பம், அமுதம், அழியாத் தன்மை

வில்வம்       – சிவலிங்கம், சமாதிக்கு

விளா          – மனித உடல்

வேம்பு         – வைராக்கியம், பொது மகளிர் உடல், உயிர் நாடி, சத்து சித்து.

வேய்          – இறைவியின் வளைந்தத் தோள்

இவ்வாறு மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கின்றார்.

இவ்வாறு பதிவு செய்துள்ள தாவரங்களை அடையாளம் கண்டு, அதை அடையாளம் காட்டும் பணி இந்நூலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியனவும் இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன.

Comments are closed.